கீழ்வேளூர் பேரூராட்சியில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் 90 வயதான மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார்.
எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று நான் கூற மாட்டேன், வாக்கு சதவீதம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்
மக்களோடு மக்களாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.
தஞ்சை மாவட்டதில் 11 மணி நிலவரப்படி 15.7% வாக்குகள் பதிவாகி உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.
திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் இயந்திரம் கோளாறு. வேறு இயந்திரம் மாற்ற ஒட்டு பதிவு தாமதம்.
திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கியபோது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரபடி 21.64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சென்ற முறை சைக்கிளில் வந்தவர், இந்தமுறை . நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
வாக்களிக்க வந்த பொதுமக்களுக்குமுகக் கவசங்கள் கிருமிநாசினிகள் வழங்கி பாதுகாப்புடன் வாக்களிக்க கேட்டுக் கொண்ட அதிமுக வேட்பாளர்.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 29 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் வென்ற ஈரோடு மாணவி கோமதிக்கு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பாராட்டுக்களை தெரிவித்தார்.
load more