மலேசிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த வரி ரத்து செய்யபடுகிறது. மீண்டும் பழைய விற்பனை மற்றும் சேவை வரியை கொண்டு வர மலேசிய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் எப்போது இந்த வரிமுறை கொண்டுவரப்படும் என அறிவிக்கவில்லை.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் பெறும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் இந்த வருமான இழப்பை ஈடு செய்ய முடியும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்ட போது, சரக்கு மற்றும் சேவை வரியை சரியாக அமல்படுத்தாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இந்த முறையை நீக்க கோடிக்கணக்கான மக்கள் போராடிய நாட்களும் உண்டு. மோசமாக அமல்படுத்தபட்டதன் காரணமாகவே இந்த முறை நீக்கப்பட்டிருக்கிறது. தவிர தேர்தல் வாக்குறுதி என்பதாலும் நீக்கப்பட்டிருக்கிறது என்றார். ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்னும் முடிவு ஏற்கெனவே அறிவிகப்பட்டதுதான். அதில் இருந்து பின் வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என மலேசிய அரசின் ஆலோசகர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
No Comment